Thursday, July 25, 2024

G.9 - "எதிரொலி" (echo verse)

G.009

2006-03-26

G.9 - "எதிரொலி" (echo verse)

---------------

( முற்குறிப்பு - எதிரொலிக் கவிதை - பாடலில் ஒரு வினா இருக்கும். பாடலின் இறுதியில் உள்ள சொல்லோ சொற்றொடரோ அந்த வினாவிற்கு விடையாக அமையும். குறள்-வெண்பாவில்தான் பாடல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளாகவும் இருக்கலாம். நூற்பாக்கள் போல ஓரடியாகவும் இருக்கலாம்.

In English (and probably other western languages): Echo verse - is a type of verse in which repetition of the end of a line or stanza imitates an echo.)


1)

ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் எந்நாளும்

தோளில் இதுதரிப்ப துண்டு.

(துண்டு)


2)

மெல்லமெல்ல ஏன்நம் வியாபாரம் வீழ்ந்தது

சொல்லென்றால் என்னஉத் தரம்?

(உத்தரம் - மறுமொழி)

(தரம்)


3)

சிவன்விரும்பி ஏறுவது செப்புக என்றால்

அவன்சொன்ன(து) என்ன விடை?

(விடை - எருது)


4)

அரைநொடியில் நீர்சொல்வீர் பார்வதிக்(கு)இன் னோர்பேர்

உரையுமென்று கேட்டால் உமை

(உமை - உம்மை - உங்களை);

(உமை - உமாதேவி)


5)

அழுததும் அம்மையப்பர் பாலூட்டக் கையால்

தொழுதெடுத்தார் ஆனந்தத் தோடு.

(தோடு (உடைய செவியன்))


6)

இரவில் வெளிச்சம் இருப்பதெவ் வாறோ?

உரைத்திட வேண்டும் மதி.

(மதி - அறிவு);

(மதி - சந்திரன்)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...